முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 591தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பல

தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி
- பலர் காயம் தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேரின் அடியில் சிக்கிக்கொண்ட இரண்டு பக்தர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பக்தர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலுக்கு சொந்தமான 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விழா கொண்டாடுவது வழக்கம். தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி - பலர் காயம் (படங்கள்) இந்த கோவில் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், திருவிழா நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்தாண்டு காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10-ம் திகதி கூழ் ஊற்றுதல், கரகம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று திருவிழாவின் முக்கிய நாளில், தேர் ஊர்வலம் நடைபெற்றது. 18 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர் அப்பொழுது காளியம்மன் கோவிலை சுற்றி தேர் பவனி நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி - பலர் காயம் (படங்கள்) தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால், 30 அடி உயரமுள்ள தோ் விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து கூடியிருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, தேருக்கடியில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு அம்புலன்ஸ் மூலம், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், சரவணன் இருவரும் உயிரிழந்தனர். மேலும் முருகன், மாதேஷ், பெருமாள் உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயங்களுடன் தருமபுாி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?