முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 663 தமிழீழத்தில் துன்பியல் சம்பவம்

முல்லைத்தீவில் ஆசிரியருடன் இணைந்து மாணவிகளுடன் உடல் உறவு கொண்ட 3 மாணவர்கள் இவர்கள் தான் !
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரும் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலரும் இணைந்து பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததான முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 5 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 மாணவர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்களை பொலிஸார் கடந்த 20ம் திகதி கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23.06.2022 அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் 6 மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்ளை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்கள். சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலீசார் தெரிவித்துள்ளார்கள். குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுமேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. More News 4U:

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?