முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 605 விபத்த்தில் தமிழர் உயிரப்பு

கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!!
சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மோட்டார் சைக்களில் விபத்தில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விஜயாலயன் மதியழகன் கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!! இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்த, 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல்துறை சேவையில் இணைந்துகொண்டுள்ளார். விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு "எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் மிகவும் சோகத்துடன், பகிர்ந்து கொள்கிறோம்" என்று ஒட்டாவா காவல்துறை டுவிட் செய்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!! இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?