முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 631 வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு!

வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி
வடக்கில் வாழும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உண்டு என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது 52 வீத தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசிய போதே வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ உரிமை இல்லை என தாம் குறிப்பிடவில்லை என வீரசேகரவின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி முதலில் எதிர்ப்பவர் நான் தான் இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அதனை முதலில் எதிர்ப்பவர் தாம் என்றும் வீரசேகர குறிப்பிட்டார். முழு நாட்டு மக்களால் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுவதை மக்களின் கருத்தைக் கேட்காமல் வழங்க முடியாது எனவும், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தம் இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை தொடர்பான விதிகளுக்கு உடன்பட முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?