முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 653 சிங்களவர்களின் செல்லப்பிள்ளை உருமை கோரும் ஆழுனர். மொழி

கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி
- ஆளுநரின் செயற்பாட்டுக்கு கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினரை சட்டவிரோதமாக குடியேற்றும் செயற்பாட்டில் ஆளுநர் அனுராதா யஹம்த் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள பிரதேசங்களுக்கு சிங்கள மொழியில் பெயர்களை அடையாளப்படுத்தி வருகின்றமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் பொதுச் சந்தையை சிங்களச் சந்தை என கிழக்கு ஆளுனர் அடிக்கடி குறிப்பிடுகின்றமை தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி - ஆளுநரின் செயற்பாட்டுக்கு உடனடி எதிர்வினை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு வருவதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய ஆளுநரின் அறிக்கையிலும் “ஏறாவூர் சிங்களச் சந்தை” என குறிப்பிடப்பட்டுள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயற்பாட்டுக்கு உடனடி எதிர்வினை கிழக்கில் முன்னிலைப்படுத்தப்படும் சிங்கள மொழி - ஆளுநரின் செயற்பாட்டுக்கு உடனடி எதிர்வினை இது குறித்து உடனடியாக எதிர் வினையாற்றிய ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். ஸரூஜ், ஆளுநர் குறிப்பிட்டது போன்று அல்ல எனவும் ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான அந்தச் சந்தை எப்போதும் “பொதுச் சந்தை” தான் எனவும் ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து ஆளுநரின் அறிக்கையில் “ஏறாவூர் பொதுச் சந்தை” என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடிதம் அனுப்பிய விவகாரம் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?