இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை
இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதம் தவறானது
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்பு கடனுதவியை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்னதாக நாடியிருந்தால், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளியில் இருந்து உதவியை பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதமானது தவறானது என பி.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஐந்து பில்லியன் டொலர் நிதி உதவி, இவ்வாண்டு தேவை என நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை
இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை
இலங்கை தனது வரலாற்றில் கடந்த மாதம் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமையை அடைந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் முடிவை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தால், ஒரு வருடத்திற்கு முன்னரே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தால், தற்போது நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்ப நிலைமையை சமாளித்திருக்க முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
அதீத எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றை அனுபவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமானது, அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் தங்கள் உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி
இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை
1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு வரவுள்ள நிலையில், இந்தப் பேச்சுக்களில் முக்கிய பங்காளராக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பங்கேற்கவுள்ளார்.
எனினும் நந்தலால் வீரசிங்க, தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில், இம்மாத இறுதியில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு நிரந்தர பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்