முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 589 இந்தியாவில் நடப்பது என்ன

கவர்ச்சி உடையில்.. காட்ட கூடாததை காட்டி.. இளசுகளை திக்குமுக்காட வைத்த
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம்வேதா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
தற்பொழுது விட்னஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை பற்றி பேசுகின்ற படமாக விட்னஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இவருடன் நடிகை ரோகினி, அழகம்பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. தமிழில் நேரடியாக உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக இந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு திரைக்கு வரவிருக்கின்றது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயார் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.
படத்திற்கும் கதைக்கும் எப்படியான காட்சி தேவை என்றாலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க நான் தயாராக இருப்பதாகவும் நடிப்பை நான் மிகவும் நேசிப்பதாகவும் நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் நான் பார்ப்பதில்லை அது என்னுடைய உணர்வு என்றும் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிளு கிளுப்பான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை கோக்கு மாக்காக வர்ணித்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.