முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 655 சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா?
இந்தியாவில் காலங்காலமாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சற்று கடினமானதாக திக்காக இருக்கும். ஆனால் இலங்கை இலவங்கப்பட்டை மிகவும் லேசானது, மென்மையானது. இரண்டுக்கும் சுவை மற்றும் அதன் பண்பில் எந்த வேறுபாடும் இல்லை. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இந்தியாவை விட இலங்கை லவங்கப்பட்டையில் கூடுதலான மருத்துவப் பயன்கள் உண்டு. ​இலவங்கப்பட்டையில் ஊட்டச்சத்துக்கள் சிலோன் என்று அழைக்கப்படும் இலங்கை இலவங்கப்பட்டையில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக கேரட்டை போல அதிக அளவு பீட்டா கரோட்டீனைக் கொண்டிருக்கிறது. இந்த பட்டையின் பழுப்பு நிறத்திற்குக் காரணமான நிறமிகளில் ப்ரோ - விட்டமின்கள் இருக்கின்றன. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? அவை தான் நம்முடைய உடலில் சேரும்போது வைட்டமின் ஏ வாக மாற்றம் பெறுகிறது. கேரட்டை போலவே லவங்கப்பட்டையும் கண்களுக்கு மிகவும் நல்லது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது.
கணையத்தின் வேலையே இந்த இன்சுலின் ஹார்மோனை முறையாகச் சுரக்கச் செய்வது தான். கணையம் இன்சுலினை சுரக்காத போது, உடலில் தேங்கும் குளுக்கோஸ் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடும். சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இலவங்கப்பட்டையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொண்டு வருவதன் மூலம் உடலில் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ஹைப்போ மற்றும் ஹைபர் கிளைசீமியா பிரச்சினையையும் தடுக்கிறது. இவ்வளவு அற்புத மருத்துவமா? ஆற்றல் வாய்ந்த நிறைய ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளை இலவங்கப்பட்டை கொண்டிருக்கிறது. குறிப்பாக எத்திரிக், மெத்தனாலிக், சினமால்டிஹைடு போன்ற சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? மாங்கனீசு அதிக நிறைந்த பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டையில் நம்முடைய உடலுக்குத் தேவையான தினசரி மாங்கனீசு தேவையில் 22 சதவீதத்தை அது பூர்த்தி செய்யுமாம். சிலோன் இலவங்கப்பட்டை மூளையின் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சிந்திக்கும் இயல்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால் மூளை நரம்புகள் சேதமடைதல், நரம்புக் கோளாறுகள், அல்சைமர், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? அதோடு மூளையின் செயல்வேகத்தை அதிகரிக்கச் செய்வது, ஞாபக சக்தியை மேம்படுத்துவது போன்றவற்றையும் இலவங்கப்பட்டை செய்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கவும் அதன் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும். இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட். ஆன்டி - இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்கின்றன. நம்முடைய அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து்க் கொள்ளும்போது அது இயற்கையாகவே ஜீரண மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிறு உப்பசம், வயிறு மந்தமாக இருப்பது, மலச்சிக்கல் போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆய்வு வந்த ஆச்சரிய தகவல் இலவங்கப்பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வேலையை செய்கிறது. நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் (national center for biotechnology information) என்னும் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், Evaluation of pharmacodynamic properties and safety of Cinnamomum zeylanicum (Ceylon cinnamon) in healthy adults எனனும் ஆய்வுக் கட்டுரையில் சிலோன் இலவங்கப்பட்டை எப்படி ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது குறித்து செய்யப்பட்ட ஆய்வையும் அதன் முடிவுகளையும் தருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிகிற எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?