அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முற்பட்ட 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 399 பேர் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப் பகுதிக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கு வசிப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிக்காது
அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு
அவ்வாறு பிரவேசிப்போரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தும் என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ கூறியுள்ளார்.
அந்த வகையில் இதுவரை 99 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பலர் இவ்வாறு சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ள முயற்சித்த போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்