முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b511

முடக்கப்பட்டது பிரபல புலம்பெயர் ஊடகத்தின் இன்ஸ்டகிராம்! உலகப் பிரபலங்கள் கண்டனம்!!
இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகள் குறித்து மேற்குலக ஊடகப்பரப்பில் ஆங்கிலமொழி ஊடாக வெளிப்படுத்திவரும் தமிழ்கார்டியன் (Tamil Guardian) ஆங்கில செய்தி இணையத்தளபக்கம் 'இன்ஸ்டகிராம்' ( Instagram) சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து செயலிழக்கவைக்கபட்டமைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனடாவில் உள்ள அரசியல் பிரபலங்கள் மற்றும் ஊடகர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். முன்னறிவித்தல் ஏதுமின்றி இன்ஸ்டகிராம் சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து 'தமிழ்கார்டியன்' இணையத்தளத்தின் பக்கம் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளமையின் பின்புலங்கள் கடுமையான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்பியுள்ளன. முன்னதான இந்த செயல் இழப்பு குறித்து தனது தரப்பில் ஒரு தன்னிலை விளக்கத்தை வழங்கியுள்ள 'தமிழ் கார்டியன்' முன்னறிவித்தலோ அல்லது உரிய விளக்கமோ வழங்கப்படாமல் தமது இணையப்பக்கம் இன்ஸ்டகிராமில் முடக்கபட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. 'இன்ஸ்டகிராம்' சமூக ஊடகத்தின் இந்த நகர்வு அவசியமற்ற ஆபத்தான இணைய தணிக்கைக்கு நிகரான நடவடிக்கை எனவும் தமிழ் கார்டியன் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் நாளாந்தம் போராடும் ஒடுக்குமுறை, தணிக்கை, அநீதிக்கு இன்ஸ்டகிராமும் துணைபோகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் இந்தவிடயத்தில் தற்போது தமிழ் கார்டியனுக்கு பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து அரசியல் ஆதரவு குரல்கள் வலுவடைந்துள்ளன. இந்த இணைய தணிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெனவும் லண்டன் ஹரோ நாடாளுமன்ற உறுப்பினர் கெரத் தோமஸ் தெரிவித்துள்ளார். அதேபோல பிரித்தானியாவின் முக்கியமான புலனாய்வு ஊடகரான பில் மில்லர் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதுடன்தான் தமிழ் கார்டியனுக்கு தனது தோழமையை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் செயல் இழக்கச் செய்யப்பட்ட விடயம் கண்டிக்கத்தக்கது என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் இனத்தின் அமைதியான ஜனநாயகக் குரல்களை அடக்கும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இது நிறுத்தப்பட வேண்டுமென்பதோடு, இந்தக் கணக்கை உடனடியாக மீட்டுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல பிரம்டன் நகர முதல்வர் பெற்றிக் பிரவுணும் கருத்துதெரிவித்துள்ளார். இது ஜனநாயகக் குரல்களுக்கு எதிரான மூர்க்கத்தனமான தணிக்கை எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாறன நகர்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீடிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?