முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b498

வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான்....இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது
ஐசிசி உலக கோப்பை தொடரின் 'சூப்பர் 12' சுற்றின் நான்காவது ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஆம், அதிரடி மன்னன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்த்து அதிரடி ஆட்டக்காரர் கே எல் ராகுல் 8 பந்துகளை சந்தித்து, 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த முதல் பந்திலையே சிக்ஸர் அடித்து அசத்தினர். ஆனாலும் 11 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த ரிஷப பந்த் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கியது. இதில், ரிஷப் பந்த் 30 பந்துகளில் 39 ஓட்டம் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய விராட் கோலி அரைசதம் கண்டு 57 ஓட்டங்களை குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜடேஜா 13 ஓட்டங்களுக்கும், ஹர்திக் பாண்டிய 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 151 ஓட்டங்களை குவித்தது. 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் ஓவர்லயே 10 ரன்களை எடுத்து அசத்திய தொடக்க ஆட்டக்காரர் முகமத் ரிஷ்வான் உடன் இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த பாபர் அசாமும் இணைந்து 8 ஓட்டங்களை சேர்த்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ஓட்டங்களை எடுத்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தொடக்க வீரர்களான பாபர் அசாம் 68 ஓட்டங்களுடனும், ரிஸ்வான் 79 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாறியமைத்துள்ளது பாகிஸ்தான் அணி.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?