முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b498

வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான்....இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது
ஐசிசி உலக கோப்பை தொடரின் 'சூப்பர் 12' சுற்றின் நான்காவது ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஆம், அதிரடி மன்னன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்த்து அதிரடி ஆட்டக்காரர் கே எல் ராகுல் 8 பந்துகளை சந்தித்து, 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த முதல் பந்திலையே சிக்ஸர் அடித்து அசத்தினர். ஆனாலும் 11 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த ரிஷப பந்த் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கியது. இதில், ரிஷப் பந்த் 30 பந்துகளில் 39 ஓட்டம் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய விராட் கோலி அரைசதம் கண்டு 57 ஓட்டங்களை குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜடேஜா 13 ஓட்டங்களுக்கும், ஹர்திக் பாண்டிய 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 151 ஓட்டங்களை குவித்தது. 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் ஓவர்லயே 10 ரன்களை எடுத்து அசத்திய தொடக்க ஆட்டக்காரர் முகமத் ரிஷ்வான் உடன் இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த பாபர் அசாமும் இணைந்து 8 ஓட்டங்களை சேர்த்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ஓட்டங்களை எடுத்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தொடக்க வீரர்களான பாபர் அசாம் 68 ஓட்டங்களுடனும், ரிஸ்வான் 79 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாறியமைத்துள்ளது பாகிஸ்தான் அணி.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.