முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b428

தொடர்ந்து ஒரே நிலப்பாட்டில் இருக்கும் சிங்கள வெறியர்கள்,
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர ஒருபோதும் அனுமதியோம் -சரத்வீரசேகர ஆணித்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இலங்கையில் நினைவுகூர ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara ) தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் பங்கேற்ற இரண்டு யுவதிகளின் கையடக்கத் தொலைபேசியை ஸ்ரீலங்கா காவல்துறையினர் பறித்ததை நியாயப்படுத்தி இன்று கருத்து வெளியிட்டுள்ள அவர், அங்கு சட்டத்தரணியாக முன்நின்றவரையும் கைது செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூரச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran ) உள்ளிட்ட சிலர் அதிரடியாக ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நினைவேந்தல் நடந்த இடத்திலிருந்த இரண்டு யுவதிகளை விசாரணை செய்த ஸ்ரீலங்கா காவல்துறையினர் அவர்களின் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ஸ்ரீலங்கா காவல்துறையினர் செய்த செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டார். “திலீபன் என்பவரை நினைவுகூரும் நிகழ்வு நடந்தது. இதுபோன்ற கொவிட் நெருக்கடி மத்தியில் வெளியே நடமாடவும் அதேபோல விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களையே அன்று காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். திலீபன் நிகழ்வில் இரண்டு யுவதிகள் ஊடகப் பெயரைப் பயன்படுத்தி பங்கேற்றிருந்தனர். இறுதியில் ஊடக அடையாள அட்டையை கோரியபோது அவர்களால் அதனை சமர்ப்பிக்க முடியாமற்போனது. உண்மையில் அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்லர். அதன்பின்னர்தான் அவர்களது கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் பெற்றனர். அதற்கெதிராக அவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அவர்களின் செயற்பாடு காவல்துறையினரது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவே இருந்தது. அந்த சம்பவம் பற்றி அறிக்கையை நான் கேட்டுள்ளேன். சட்டத்தை சரிவர நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். அந்த இடத்தில் ஆங்கிலத்தில் உரத்த குரலாய் ஒருவர் கருத்து வெளியிட்டார். அவரையும் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்திருக்க வேண்டும். எனினும் குறித்த யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையினர் இடையூறு செய்யவில்லை. அவர்கள்தான் திலீபனின் நினைவுகூரலில் பங்கேற்றிருந்தனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த விடயங்கள் எனக்குத் தெரியும். மாணவர்களை இழுத்துச் சென்றமை, பிள்ளைகளை இழுத்துச் சென்றமை, வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் என பல விடயங்களை அவதானித்தேன். இந்நிலையில் போரில் உறவினர்கள் உயிரிழந்திருந்தால் வீட்டில் வைத்து விளக்கு ஏற்றி அவர்களை அஞ்சலிக்கலாம். ஜேர்மனியில் ஹிட்லரை நினைவுகூர முடியாது. அந்த வகையில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் இடமளிக்கமாட்டோம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?