முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b482

பரபரப்பான ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்! நடுங்கிப்போன
மக்கள் 14 வயது சிறுவன் ஒருவர் பட்டப்பகலில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு மேல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவம் ஒன்றில் 14 வயதான Justin McLaughlin உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை படுகாயமடைந்த சிறுவன் ராணி எலிசபெத் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளை நடு நடுங்க வைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவத்திற்கு தொடர்பான காரணிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது ஒரு கொடூர வன்முறைச் செயல் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார், குற்றவாளியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?