“அரசாங்கத்தின் தவறான நிதிக்கொள்கையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்”
இலங்கையில் கோவிட் தொற்றினால் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மாறாக தற்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கோவிட் -19 தொற்றுநோயால் ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரே நாடு இலங்கை ஆகும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றுநோய்களின் போது இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தையும் வெளிநாட்டு இருப்புக்களையும் நிர்வகித்ததாக குறிப்பிட்ட அவர், எனினும் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 50 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தேர்தல்களின் போது ஆதரவளித்த தொழிலதிபர்களுக்கு ஆதரவாக தற்போதைய அரசாங்கம் வட் வரியை குறைத்துள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் வருமானம் குறைவு ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்