முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b486

இங்கிலாந்தில் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கை விஞ்ஞானி தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கலாநிதி நடராஜா முகுந்தன்(Dr. Nadaraja Mukundan), 47, அவரது மனைவி ஷர்மிளா(Sharmila), 42, மற்றும் அவர்களின் 13, ஒன்பது மற்றும் ஐந்து, வயதுடைய மூன்று குழந்தைகள்,இந்த நாடு கடத்தல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். 2018 இல் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மெல்லிய பட ஒளிமின்னழுத்த சாதனங்களின் உற்பத்திதுறையில் பணிபுரிய முகுந்தனுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் அவர் இங்கிலாந்துக்கு வந்தார். பொதுநலவாய திட்டமொன்றின்மூலம் இங்கிலாந்துக்கு வந்து ஆராய்ச்சி செய்து பணியாற்ற அவருக்கு அனுமதி கிடைத்தது. அவரது மனைவி முதியோர் இல்லத்தில் வயதானவர்களைப் பராமரிக்கும் வேலையைப் பெற்றார். நவம்பர் 2019 இல், முகுந்தன் தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க ஒரு குறுகிய பயணமாக தனது சொந்த நாடு திரும்பினார். அங்கு அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பி இங்கிலாந்து திரும்பினார். அவர் இலங்கை வந்தபோது அனுபவித்த அனுபவத்தின் அடிப்படையில் தஞ்சம் கோரினார். பெப்ரவரி 2020 இல் அவரது உதவித்தொகை காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதி உள்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில்,குடும்பத்தின் புகலிடக் கோரிக்கை "செயலில் பரிசீலனையில் உள்ளது", என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஒக்டோபர் 11 அன்று அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குடும்பம் பிரிஸ்டலில் வாடகைக்கு வீடு எடுத்து இருந்ததுடன் அனைத்து பிள்ளைகளும் அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்றனர். இந்த தம்பதியின் மூத்த மகள் கிஹானியா 100% வருகை விகிதத்துடன் சிறந்த பாடசாலை அறிக்கைகளைப் பெற்றார். குறிப்பாக அறிவியலில் அவர் செய்த சாதனைகளுக்காக பாராட்டப்பட்டார். அவள் வயதாகும்போது ஒரு டொக்டராகப் வரவேண்டும் என்று விரும்புகிறாள். பிரிஸ்டலில் உள்ள வாடகை விடுதியில் இருந்து குடும்பத்தை கடந்த மாதம் லண்டன் ஹோட்டலுக்கு மாற்றிய உள்துறை அமைச்சு, மூன்று பிள்ளைகளையும் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றியது. எனினும் இரண்டு இளைய பிள்ளைகளுக்கு தற்போது பாடசாலை செல்ல அனுமதி வழங்கப்ட்டுள்ளது.ஆனால் கிஹானியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளார். "இங்கே மிகவும் சலிப்பாக இருக்கிறது. இது ஒரு சிறைச்சாலை போன்றது, ”என்று அவர் கார்டியனிடம் கூறினார். "நான் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் நான் எனது பள்ளி சீருடையை அணிந்துகொண்டு தெருவில் போய் நிற்கிறேன். ”என தெரிவித்துள்ளார். முகுந்தனின் புலமைப்பரிசில் விசா முதலில் காலாவதியானபோது, ​​முதியோர் இல்ல மேலாளர் ஷர்மிளாவை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிய போதிலும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?