முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b474

உலக பட்டினிக் குறியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
2021ம் ஆண்டுக்கான உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான பட்டியல் வெளியாகிள்ள நிலையில், இலங்கைக்கு 65வது இடம் கிடைத்துள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான அறிக்கைக்கு, 135 நாடுகளின் தரவு மதிப்பீடு செய்யப்பட்டது. இவற்றில், 116 நாடுகளுக்கான 2021 பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு தொடர்பான மதிப்பெண்களைக் கணக்கிட மற்றும் தரவரிசைப்படுத்த போதுமான தரவு இருந்தது (ஒப்பிடுகையில், 107 நாடுகள் 2020 அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன). 19 நாடுகளுக்கு, தரவு இல்லாததால் தனிப்பட்ட மதிப்பெண்களைக் கணக்கிட முடியவில்லை மற்றும் தரவரிசைகளைத் தீர்மானிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில், மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இலங்கைக்கு 65வது கிடைத்துள்ளது. 2000ம் ஆண்டில் இலங்கை சனத்தொகையில் 21.9% ஆனவர்கள் பட்டினிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலை தீவிரமானதாக கருதப்பட்டது. இருப்பினும் தற்போது இலங்கையில் பட்டினி விகிதம் -26.9% ஆக உள்ளது. இது இப்போது குறைந்த பட்டினி விகிதமாக கருதப்படுகிறது. எனினும், அண்டைய நாடுகளான இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தை என்பன பின் தங்கியுள்ளன. இதேவேளை, சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?