முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b493

விடுதலை புலிகளால் துரோகிகளென குறி வைக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பில்! மனோ பகிரங்க குற்றச்சாட்ட
ு தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார். யாழில் பிரபா கணேசனுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் தனது முகப்புத்தக பதிவில் விளக்கம் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மகிந்த அரசுடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள். ஆயுதப்போர் என்பது அழிவுப்போர் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்தது காலத்தின் கட்டாயங்கள். “எது சரி, எது பிழை” என இன்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது.வரலாறு தான் தீர்ப்பு வழங்கும். அதுபோல், ஜனநாயக மக்கள் முன்னணிக்குள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் புதுவரவு, புதுபித்தல் வரவு மாற்றங்கள் வருமாயின், காலத்தின் கட்டாயங்கள் ஏற்படுமாயின், நான் பகிரங்கமாக சொல்வேன். எனது பாதை கரடுமுரணானது. ஆனால், நேரானது. 2005 முதல் 2020 வரை என் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சிகள் உட்பட, உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் ஏற்பட்ட எல்லா சவால்களையும் வெற்றிக்கரமாக எதிர்கொண்டு, இன்று தென்னிலங்கையில், தேசிய மட்டத்தில், தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வீச்சு பெற்று, வளர்ச்சியடைந்த ஒரு கூட்டணியின், தலைமை பொறுப்பில் நான் இருக்கிறேன். ஆகவே சும்மா, எடுத்தேன், கவிழ்த்தேன், என்று நான் முடிவுகளை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். காலம் கடந்தும் உன்மையைச் சொன்ன மனோ

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?