முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b489

கப்டன் வானதி அக்கா களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை
எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! ஏராளம்……. ஏராளம்…. எண்ணங்களை எழுத எழுந்துவர முடியவில்லை, என் துப்பாக்கி எழுந்து நிற்பதால். எழுந்துவர என்னால் முடியவில்லை! எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! சீறும் துப்பாக்கியின் பின்னால் என் உடல் சின்னா பின்னப்பட்டு போகலாம் ஆனால் என் உணர்வுகள் சிதையாது உங்களை சிந்திக்க வைக்கும். அப்போது எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! மீட்கப்பட்ட – எம் மண்ணில் எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ அன்றேல் மலர் வளைய மரியாதைக்காகவோ அல்ல! எம் மண்ணின் மறுவாழ்விற்கு உங்கள் மன உறுதி மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே. எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நிச்சயம் நீங்கள் உலாவருவீர்கள்! அப்போ எழுதாத என் கவிதை உங்கள் முன் எழுந்து நிற்கும்! என்னை தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள் அன்பு காட்டியவர்கள் அத்தனை பேரும் எழுதாது எழுந்து நிற்கும் கவிதைக்குள் பாருங்கள்! அங்கே நான் மட்டுமல்ல என்னுடன் அத்தனை மாவீரர்களும் சந்தோசமாய் உங்களைப் பார்த்து புன்னகை பூப்போம்! விடுதலைப் புலிகளின் போராளி கவிஞர் ஆன பெண் போராளி வானதி அவர்களால் எழுதப்பட்ட கவிதை இது1990 ம் ஆண்டு வடகிழக்கில் உள்ள லக்சக்கணக்கான மக்கள் பார்த்து கண்ணீர் சிந்திய கவிதை இதுதான் இவை பூங்கா தொடக்கம் தூயிலும் இல்லம் வரை எழுதப்பட்டு பாடுந்தது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?