முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b494

கொலை செய்யப்பட்ட தனது ஜோடி பாம்பு: பழிவாங்க காவல்நிலையம் வந்த பாம்பு! பின்பு நடந்தது என்ன?
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் பாம்பு ஒன்று தனது ஜோடி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்து செய்த காரியம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சற்று தொலைவில் ஜோடி பாம்புகள் இருந்துள்ளது. காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நபர், புகார் கொடுத்துவிட்டு தனது காரில் கிளம்பிய போது, அந்த ஜோடி பாம்பு ஒன்றின் மீது கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை அவதானித்த மற்றொரு பாம்பு குறித்த காரை வேகமாக துரத்திக்கொண்டே சென்றுள்ளது. பாம்பு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர், காவல் நிலையம் அருகே குழி தோண்டி புதைத்துவிட்டனர். மற்றொரு பாம்பு இனிமேல் இங்கு வராது என்று நினைத்த நிலையில், குறித்த பாம்பு புதைக்கப்பட்ட இடத்திற்கு மற்றொரு பாம்பு திடீரென வந்துள்ளது. அங்கு சிறிது நேரம் காத்திருந்த பின்பு, காவல் நிலையத்திற்குள் சென்ற அந்த பாம்பு, மறியல் செய்வதுபோல் அங்கு படமெடுத்து அமர்ந்ததை அவதானித்த பொலிசார் பயத்தில் நின்றுள்ளனர். சிலர் பாம்பை அடிக்க முயன்ற நிலையில், பொலிஸ் அதிகாரி அடிக்க வேண்டாம் என்று கூறியதையடுத்து, பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து பிடிக்க செய்து காட்டில் கொண்டு சென்றுள்ளனர். நாகப்பாம்பு காவல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததை பார்த்த பொதுமக்கள், நாகப்பாம்பு தனது ஜோடியின் மரணத்திற்கு புகார் அளிக்க வந்திருக்கிறது என்று சொல்லத் தொடங்கினர். பாம்பு பழி வாங்கும் என்பதை உண்மையாக்கும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?