முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b443

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர்! எஸ்.கஜேந்திரன்
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்தக் காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமாலக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பாராளுமன்ற கூறுகையில், இராணுவத்தினரின் பேச்சை நம்பி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அவர்களிடம் சரணடைய சென்ற பல பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடத்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே குறித்த சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர். அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இலங்கையில் தற்போது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் தந்தைகள் கண்ணீரோடு வாழ்ந்து வருவதோடு தனது பிள்ளைகளை தேடி வருகிறார்கள். காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் எம்.பி. சபையில் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?