சோகம்! இறந்த தாயின் உடலுடன் பல நாட்கள் தங்கியிருந்த குழந்தைகள்!!
பிரான்சில் திடீரென உயிரிழந்த தங்கள் தாயின் உடலுடன் இரண்டு குழந்தைகள் பல நாட்கள் இருந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பிரான்சில் வசித்து வரும் 5 மற்றும் 7 வயதுடயை குழந்தைகள் இரண்டு பேர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் போலீஸார் அவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அந்த இரண்டு குழந்தைகளும் போலீசாரிடம், அமைதியாக இருங்கள், அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறினர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தைகளின் தாயார் ஏற்கனவே இறந்துவிட்டார்.
தாயின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அப்பெண் இயற்கையான காரணங்களினால் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த இரு சிறுமிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசின் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்