தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி
பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மக்களை அழைத்து சென்று நிர்கத்தியாகிய சம்பவங்கள் வெளியாகிய நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சில தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலிமுகவர்களால் ஏமாற்றப்பட்ட இளைஞனொருவன் போலிமுகவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
நாங்கள் பிரான்சின் ஆளுகைக்குட்பட்ட ரியூனியன் தீவில் இருக்கிறோம். எங்களைப் பிரான்சுக்கு அனுப்புவதாகக் கூறி முகவர்கள்,எங்களிடம் பணத்தினை வாங்கி ஏமாற்றி இப்பொழுது இங்கு வைத்திருக்கிறார்கள்.
நிர்கதியாகியுள்ள 53 பேர்
தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி | 53 Sri Lankan Reunion Island Claiming Taken France
நாங்கள் 53 பேர் இங்கு வந்த நிலையில் அதில் மூன்று பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டு எஞ்சிய 49 பேர் நிராகரிக்கப்பட்டு இருக்கிறோம்.
எங்கள் காணி ,வீடு ,வளவு என்பவற்றை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம். மீண்டும் எங்களது நாட்டிற்குச் சென்றால் எங்களால் நிம்மதியாக வாழ முடியாது.
எங்களது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. நாங்கள் கடற்தொழில் ,விவசாயம் செய்கிறோம் ,
நாட்டில் இந்த பொருளாதார நெருக்கடியினால் மண்ணெண்ணெய் ,உர பற்றாக்குறை என பல பிரச்சினைகள் காணப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் நாட்டிற்கு சென்று எங்களால் தொழில் செய்ய முடியாது.
மனைவி ,பிள்ளைகளை நிம்மதியாக உழைத்து பார்க்க முடியாது.ஏனெனில் எங்கள் சொத்துக்களை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம்.
சாவு என்பது எங்களுக்கு பெரிதல்ல
தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி | 53 Sri Lankan Reunion Island Claiming Taken France
தொடர்ச்சியாக 25 நாட்கள் கடலில் பயணம் செய்து தான் எங்கள் உயிர்களை வெறுத்து தான் இங்கு வந்திருக்கிறோம்.
சாவு என்பது எங்களுக்கு பெரிதல்ல.நாங்கள் எவ்வளவோ சாவுகளை பார்த்து வந்திருக்கிறோம். மீண்டும் நாட்டிற்கு வருவதாக எங்களுக்கு சிந்தனை இல்லை.
விமான நிலையத்திலும் சில பேரை தங்க வைத்திருக்கிறார்கள். உடனடியாக இந்த சர்வதேச அமைப்புகள் இதில் தலையிட்டு எங்களை வெவ்வேறு நாடுகளுக்கு குடியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்