முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 445 தமிழர்களிற்கு எவ்விதமான சலுகைகளும் வழங்க சிங்களவர்கள் தயார் இல்லையென்பதை உறுதிப்படுத்துவதே ரணிலின் வேலையா?

அதைஅழிப்பதற்கான தீர்வையும் அவரே சொல்லியுள்ளார் தெளிவாக வாசியுங்கோ?
13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி “அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் போது இதனைத் தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்குப் பதில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை தான் நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 8ஆம் திகதி முன்வைப்பார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
“நிறைவேற்று அதிகாரம் கொண்டது எனது பதவி. அந்தவகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். அரசமைப்பில் 37 ஆண்டுகளாக 13ஆவது திருத்தம் உள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்கவேண்டும். 13ஐ இல்லாது ஒழிக்காவிட்டால் அதனை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். தனிப்பட்ட வரைவைக் கொண்டுவந்து யார் வேண்டுமானாலும் அதனை நீக்க முயற்சிக்கலாம். நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது நான் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நேரிடும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. இந்தத் திருத்தம் குறித்து 5 நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி, இந்தத் திருத்தத்தின்படி நாம் ஒற்றையாட்சியிலேயே இருக்கின்றோம். ஏனைய இனங்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு நான் உடன்படுகின்றேன். நாம் உருவாக்கி வைத்துள்ள மாகாண சபைகளுக்கு இலண்டன் மாநகர சபைக்கு உள்ள அதிகாரம் கூடக் கிடையாது. அங்கு இதைவிட கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் இது சமஷ்டி ஆட்சி முறையாகிவிடாது” – என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்தன தேரர், திஸ்ஸ விதாரண, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்த்தன, துமிந்த திஸாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன், சுரேன் ராகவன், சரத் வீரசேகர, சிவநேசத்துரை சந்திரகாந்தன், சாகர காரியவசம், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம் அதாவுல்ல, ரிஷாத் பதியுதீன், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.