இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது
Follow us on Google News
விளம்பரம்
டெல்லி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தற்காலிக குடிசைகளில் தங்கியிருந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைதான ஒருவரிடமிருந்து 46.5 இலட்சம் இந்திய ரூபாவை இந்திய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அதிகாரி மந்தீப் சிங் சித்து கூறுகையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தெற்கு டெல்லியின் மதங்கிர் கொலனியை தளமாகக் கொண்டு 'தக் தக்' என்ற கும்பலாக செயல்பட்டு வந்த குழு கைது செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இன்று (12ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
படையினரிடமிருந்து தப்பிக்க
இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested
சந்தேகநபர்கள் பெருமளவிலான பணத்தைத் திருடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிக்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தின் பேரில், தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த முருகன், உத்தரபிரதேச மாநிலம் மாதங்கிர் கொலனியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுரேஷ் மற்றும் புதுடில்லியைச் சேர்ந்த சுரேஷ் என்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகரில் இடம்பெற்ற திருட்டு
இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested
சண்டிகரில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி மோட்டார் வாகனத்தில் பணம் திருடப்பட்ட சம்பவத்திலும் சந்தேகநபர்கள் ஈடுபட்டதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்