முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 377 வீரன் என்ற பெயரை கள்ளனாக மாற்றும் ஒரு சில தமிழர்கள்,

இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது
Follow us on Google News விளம்பரம் டெல்லி மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தற்காலிக குடிசைகளில் தங்கியிருந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கைதான ஒருவரிடமிருந்து 46.5 இலட்சம் இந்திய ரூபாவை இந்திய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை அதிகாரி மந்தீப் சிங் சித்து கூறுகையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தெற்கு டெல்லியின் மதங்கிர் கொலனியை தளமாகக் கொண்டு 'தக் தக்' என்ற கும்பலாக செயல்பட்டு வந்த குழு கைது செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இன்று (12ஆம் திகதி) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். படையினரிடமிருந்து தப்பிக்க இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested சந்தேகநபர்கள் பெருமளவிலான பணத்தைத் திருடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பிக்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில், தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த முருகன், உத்தரபிரதேச மாநிலம் மாதங்கிர் கொலனியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுரேஷ் மற்றும் புதுடில்லியைச் சேர்ந்த சுரேஷ் என்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சண்டிகரில் இடம்பெற்ற திருட்டு இந்தியாவில் பாரிய திருட்டு - இலங்கைத்தமிழர்கள் நால்வர் கைது | Theft In India Four Sri Lankan Tamils Arrested சண்டிகரில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி மோட்டார் வாகனத்தில் பணம் திருடப்பட்ட சம்பவத்திலும் சந்தேகநபர்கள் ஈடுபட்டதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.