முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 410 தனிநாடு வைத்துயிருப்பவர்களிற்கு மேலதிகமான ஆசைகளையும் தான் நிறைவேற்றப்போவதாக புடின் தெரிவித்தார்,

உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து ரஸ்யா போரை தொடங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா - பிரிட்டன் ஆதரவு உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. ரஸ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் திகதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் நேர்மறையான பலன்களை தருவதாக ரஸ்ய அதிபர் புடின் தெரிவித்தார். நியோ நாஜிக்களை அழிப்பதே நோக்கம் உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine அதைத் தொடர்ந்து ரஸ்ய படைகள் உருவான 80வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அதிபர் புடின் கூறும்போது, ‘‘உக்ரைன் போரில் வெற்றி நிச்சயம். துளியும் சந்தேகம் வேண்டாம். ரஷ்ய மக்களின் ஒற்றுமை மற்றும் வேண்டியதில் நிலைத்தல் ஆகிய குணாதிசயங்களால் இந்த வெற்றி சாத்தியமாகும். நமது வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் அதற்கான பலன்களை கொடுக்கும். உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். ஹிட்லரின் நாஜிப்படைகளின் தற்போதைய வடிவம் தான் நியோ நாஜிக்கள். இன வெறியர்களான அவர்கள் நசுக்கப்பட வேண்டும். சர்வாதிகாரி மற்றும் யூத மக்களை கொன்று குவித்து உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைத்த ஹிட்லரின் நாஜிப்படைகளை நாம் ரஸ்யர்கள் அழித்ததை போல், இந்த நாஜிக்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்’’ என அவர் தெரிவித்தார். அணு ஆயுத போர் உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine இந்தநிலையில் அணு ஆயுத போர் உருவாக வாய்ப்புள்ளதாக ரஸ்ய முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் ராணுவ நடவடிக்கையை குறிப்பிடும் வகையில், "வழக்கமான போரில் தோல்வி அணு ஆயுதப் போரைத் தூண்டலாம்" என்று ரஷ்ய முன்னாள் அதிபர் மெட்வடேவ் இன்று கூறினார். ஒரு வேளை ரஸ்யா தோற்கடிக்கப்பட்டால், அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளது. அதற்கு பின் இந்த உலகத்தின் தலைவிதி எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?