கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு
தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது.
கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம்
கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife
கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு
கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife
அதிஷ்ட இலாபத்தில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில்,கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் இருந்த மகள் தற்போது பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது.
ஜனவரி 17ம் திகதி சீட்டை வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பொட் என கூறப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்