பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் - கருங்கடலில் இரகசிய மாளிகை
உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார்.
ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார்.
இரகசிய மாளிகை
பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் - கருங்கடலில் இரகசிய மாளிகை | A New Successor In The Name Of Putin
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவரை தனது வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் கூறியுள்ளார் Abbas.
அடுத்த அதிபராக புடினால் தேர்ந்தெடுக்கலாம் என கருதப்படுவபவர்களில், மாஸ்கோ மேயரான Sergey Sobyanin, பிரதமர் Mikhail Mishustin, மற்றும் புடினுடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்களின் துணைத்தலைவர் பதவி வகிக்கும் Dmitry Kozak ஆகியோரின் பெயர்கள் கூறப்படுகின்றன.
மேலும், தனது இரகசிய மாளிகையில் அமைதியாக, பாதுகாப்பாக வாழ முடிவு செய்ய இருக்கும் புடின், தனது கடைசிக்காலம் வரை ஒரு செனேட்டராகவே இருக்கும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்