முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 427 ஆள்கடத்தல் விடடத்தில் பல சுத்து மாத்துக்கள் விளிப்பாகயிருந்தால் நீங்கள் தப்பலாம்,

ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!!
'என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று சொல்லுறதும், புலம்பெயர் நாடுகளில ஒரு சிலருக்கு முழுநேர வேலைதான். அதாவது வேற வேலை எதுவும் செய்யாமல் ஒரு வருசத்தில ரெண்டு தடவை மாத்திரம் நடக்கிற ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு போய் வாரதையே ஒரு முழுநேர வேலையாச் செய்துகொண்டிருக்கிற சில புலம்பெயர் அலப்பறைகள் இங்க இருக்கினம். 'ஓ.. அப்படியெண்டா ஐ.நா சபையின் பணியாளர்களா அவர்கள்..??' என்று வாயைப் பிளந்திடாதேயுங்கோ. இப்படி ஒன்றுமே இல்லாத அலப்பறைகளையெல்லாம் வைத்து சம்பளம் கொடுக்க ஐ.நாவுக்கு என்ன விசரா? அப்படியெண்டா இவங்களுக்கு சம்பளம்? அதுக்குத்தான் சில புலம்பெயர் ஆர்வக்கோளாறுகள் இருக்குதுகளே..!! கீழ கிடக்கிற ஒரு பேப்பரில 'தமிழ் தேசியம்' எண்டு எழுதிப்போட்டு இவர்களிடம் யார் குடுத்தாலும் யார் எவர் என்று பார்க்காமல் உடனே காசை அள்ளிக்கொடுக்கக்கூடிய சிலர்தான் இந்த அலப்பறைகளின் டார்கெட். ஜெனிவாவில் இருக்கிற சுப்பர் மார்கெட்டுக்கு வரும் யாராவது வெள்ளைக்காரை நட்பாக்கி அவருடன் நிண்டு போட்டோ எடுத்துத்துவிட்டு, 'நான் லத்தின் அமெரிக்க நாடொன்றின் தூதுவரைச் சந்தித்தேன்', 'இஸ்ரேலின் உயரதிகாரி எங்களுக்கு உதவத் தயார் எண்டு சொன்னவர்', 'பிடல் காஸ்ரோவிண்ட மச்சானோட ரகசியச் சந்திப்பு செய்தனாங்க..' இப்படி பம்மாத்துக் காட்டுவதுதான் இவர்களது ஜெனிவா வேலைத்திட்டம். கடந்த 10 வருடங்களா ஜெனிவாவில் இப்படிப் புதினம் காட்டிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு இளசுகள் கடந்த சில கூட்டத்தொடரில காணக்கிடைக்கேல்ல. ஒருவேளை மனம் திருந்தி வேலைக்கு கீலைக்கு போகத்தொடங்கிட்டினமாக்கும் என்று விசாரிச்சுப் பார்த்தபோதுதான் கோதாரிபிடிச்சவன்களிண்ட ஒரு சுத்துமாத்து தெரியவந்தது. ஜெனிவாவுக்கு என்று தங்கட நிறுவனத்திண்ட பேரில பலரை இலங்கையில இருந்து சுவிசுக்கு எடுப்பித்து, சுவிசில 'அசைலம்' அடிக்கவச்சிட்டான்களாம். சும்மா இல்ல, ஒவ்வொருவரிட்டேயும் 30 ஆயிரம் சுவிஸ் பிராங் வாங்கிக்கொண்டாம். இந்த விசயம் சுவிஸ் குடிவரவுத் திணைக்களத்திற்கு தெரியவந்ததைத்தொடர்ந்து, ஐ.நாவுக்கு என்று வருபவர்களுக்கு மாத்திரமல்ல அவர்களை ஐ.நாவுக்கு எடுப்பித்த அந்த அலப்பறைகளுக்கும் தடைவிதித்துவிட்டதாம் ஜெனீவா. இப்ப ஜெனிவாவை அப்படியே கைவிட்டுவிட்டு பிரசில்ஸ்சின் பக்கம் சுத்திக்கொண்டுநிக்கினமாம். அட நல்ல பிசினசா இருக்கே!! ஐ.நாவை வைத்து இப்படியெல்லாம் உழைக்கமுடியும் என்று தெரியாம பிரான்சில இருக்கிற கிருபா வாத்தி 'மக்கள்...மக்கள்..' எண்டு 30 வருசமா அலைஞ்சுகொண்டு திரிகிறார். பிழைக்கத்தெரியாத மனுசன்!!???

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?