முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 421 தமிழர் பகுதியில் கடத்தல் அதிகரிப்பு பின்னால் சிங்களக் கைக்கூலிகள்,

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார்
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார் | Cup Vechile Hijacking Incident Jaffna வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் வீதியை மறித்து, வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வாகனததை கடத்திய கொள்ளையர்களை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை துரத்திச் சென்று வாகனத்தை கைப்பற்றியதுடன், 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன் மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?