சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு
இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நேரடியாகவே முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமென சிறிலங்கா இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரினால் சரணைடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு தெரிவித்து சிறிலங்கா இராணுவத்திடம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் கோரப்பட்ட போதிலும் கடந்த நான்கு வருடங்களாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு
சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு | Surrendered Ltte Order Issued To Sri Lanka Army
இதனையடுத்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்குமார் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் முன்னிலையாகி இருந்தனர்.
இணைய வழியில் முன்னிலையான இராணுவ அதிகாரி
சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு | Surrendered Ltte Order Issued To Sri Lanka Army
மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்முறையீட்டாளர் சார்பில் முன்னிலையாகி, சரணடைந்த புலிகள் தொடர்பான விவர பட்டியல் இராணுவத்திடம் இருப்பதாகக்கூறி ஆதாரங்களை முன்வைத்தார்.
இதன்போது, இராணுவம் சார்பில் இராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ரவிந்திர பத்திரகே இணைய வழியில் ஆணைக்குழுவில் முன்னிலையானமைக்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டனர். இதுவொரு முக்கியமான விசாரணை என்பதால் நேரடியாகவே ஆணைக்குழுவுக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என இராணுவத்துக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது.
இராணுவத்திற்கு உத்தரவு
சரணடைந்த விடுதலை புலிகள் - சிறிலங்கா இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு | Surrendered Ltte Order Issued To Sri Lanka Army
இதன்படி எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இராணுவம் நேரடியாக ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலறியும் விண்ணப்பம் ஒன்றுக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என RTI சட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்