முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 407 சிங்ளகவர் பகுதியில் எல்லை மீறி நடக்கும் பாலியல் பிரச்சனைகள்,

மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை
மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திஸ்ஸமஹாராம காவல்துறை எல்லையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி 14 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி சத்திர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ​​இரண்டரை வயது குழந்தையை அவரது 12 வயது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார். கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை | Man Raped Wifes Sister Sentenced To Prison மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சம்பந்தப்பட்ட நபர் பல சந்தர்ப்பங்களில் மனைவியின் சகோதரியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை | Man Raped Wifes Sister Sentenced To Prison அவருக்கு எதிரான பூர்வாங்க விசாரணையின் பின்னர், சட்டமா அதிபர் 15.02.2013 அன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார். அதன்படி, நேற்று (ஜன. 18) மாலை, வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, ​​சந்தேக நபர் உரிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகநபருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 13 வருடங்கள் வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கு 39 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின