யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிறுமியை இரு தமிழ் காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளியை எடுத்து, அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக வன்புணர்வு
யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Tamil Police Sexually Assaulted A Child Jaffna
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து 17 வயதான சிறுமியை இரண்டு தமிழ் காவல்துறையினர் அழைத்துச் சென்று யாரும் இல்லாத வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதனைக் காணொளியாக பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைக் காண்பித்து அச்சுறுத்தி தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி(தற்போது 19 வயது) திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை
யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Tamil Police Sexually Assaulted A Child Jaffna
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையிலும், வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும் அவர் இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்தோடு, சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய காணொளியை பாடசாலை மாணவர்களுக்கும் சந்தேகநபர்கள் அனுப்பினர் எனவும், பாடசாலை மாணவர்களும் அச்சிறுமியை பாலியல் வன்புணர்க்கு உட்படுத்த முயன்றனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்