பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமுக ஊடகங்களில் நாளாந்தம் பதிவுகளை இட்டு வந்த பிரித்தானிய பிரஜைக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது. எனவே அவரை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு | Visa Of British Tourist Cancelled கடவுச்சீட்டு பறிமுதல் முன்னதாக, கெய்லி பிரேசர் விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம கைப்பற்றியிருந்தது. விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே தற்போது எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********