குருநாகலில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்!
Sri Lanka PoliceKurunegalaAccident
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
குருநாகல் - பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்த எல பெம்முல்லே கெதர வீதியில் 8 ஆம் மைல் கம்புவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெம்முல்லே கெதரயிலிருந்து கஹவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கின்னேரிய பாலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வதாகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்