தலைவர் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடும் புலம்பெயர் முன்னாள் போராளிகள்!
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணனுடைய மகன் கார்த்திக் மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை முள்ளிவாய்க்கால் வாரம் தொடர்பில் ஐபிசி தமிழ் ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கயைில், '' புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலரின் நடவடிக்கைகள் மிகுந்த வேதனையளிக்கின்றது.
தலைவர் பிரபாகரனை மதித்து ஒரு தேசிய தலைவராகவோ, அல்லது தமிழினத்தின் தலைவராகவோ வெளிப்படுத்த தயங்குகின்றனர்.
அவரின் பெயரை வைத்து இலாபம் ஈட்டிக்கொள்ளவும், தங்களது ஆடம்பர வாழ்க்கையை வாழவுமே இவர்கள் முற்படுகின்றனர்.'' என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தொடர்பிலும், தலைவர் பிரபாகரன் தொடர்பிலான புலம்பெயர் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கார்த்திக் மனோகரன் கூறும் விடயங்களை தொடரும் காணொளியில் காணலாம்.
அவரின் முடிவு சரி என ஐம்பது வீதமான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் மக்களின் கேழ்விக்காக அவர் விடை சொல்லிய ஆக வேண்டும்01 முள்ளிவாய்க்கால் மரணப்பொறிக்குள் சிக்கியபோது அவரின் அண்ணா ஏண்வெளிநாடுகளில் பெரிய அழவில் ஆற்பாட்டங்களில் ஈடுபடவில்லை?
02 விடுதலைப் போராட்டத்தில் அவரின் மகனையாவது ஏன் அவர் போராட அனுப்பவில்லை,03
15வருடமாக அவர்கள் அமைதியாகயிருந்துவிட்டு இப்பொழுது அவர்கள் பொங்கி எழுந்ததின் காரணம் என்ன,
தலைவரின் இலக்சியத்தை மீட்பதற்காக ஏன் அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபடவில்லை இக்கேழ்விகளிற்கு பதில் சொல்லிய ஆக வேண்டும்?
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்