முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 வருட நினைவு நாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்ட இடமொன்றில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் பலரும் வந்து கஞ்சி அருந்தியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
காவல்துறையினர் அராஜகம்
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் வந்து கஞ்சி பருகினர்.
எனினும், கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது காவல்துறையினர் அதனை தடுத்து பெரும் அராஜகத்தில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்