விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் சவேந்திர சில்வா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!
![விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் சவேந்திர சில்வா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்! | War Ltte Leader Might Have Escaped Shavendra Silva விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் சவேந்திர சில்வா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்! | War Ltte Leader Might Have Escaped Shavendra Silva](https://cdn.ibcstack.com/article/efdae943-b758-4e4a-9ba1-b634b98b46b9/24-6649cd31042ab.webp)
Shavendra SilvaSri Lanka Final WarVelupillai Prabhakaran
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யுத்ததில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம்.
ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.
58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.
ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது.
ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.என்றார்.
கருத்துகள்