முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 677 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

 

தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு – ஐக்கிய இராச்சியம்

 May18,2024

முள்ளிவாய்க்கால்…
தமிழின அழிப்பு நாள் 18/05/2009.
15 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – 2024

தமிழீழ அரசியல்துறையின் ஏற்பாட்டில் சௌத்தென்ட், பசில்டன், மற்றும் எசெக்ஸ் மாநகரில் வாழும் சுமார் 200க்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்து , சௌத்தென்ட் கடற்கரையில் தமிழர் இன அழிப்பு நாள் மிகவும் உணர்வெளிச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வினை தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.த.நிருபன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களுக்காக மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, இதுவரைகாலமும் தமிழீழ மண்மீட்புப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இளையோர்கள், தமிழின அழிப்பு சார்ந்து ஆங்கிலத்திலும், தமிழிலும் உரைகளை வழங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த பாடல் வெளியீடு:
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் அன்பு மகள் செல்வி.முகிலினி அவர்களால் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பாடலை இன்று வெளியீடு செய்து வைத்தார்.

அடுத்து, முள்ளிவாய்க்கால் பிரதான பொதுச்சுடரினை இறுதிப்போரில் தன் உறவுகளை இழந்தவரான திருமதி.நிசாந்தினி சந்திரதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளும் மிகவும் உணர்வுபூர்வமாக
நூற்றுக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி இனவழிப்பில் மாண்டுபோனவர்களை நினைந்து கடலில் விட்டனர். அவை எரிந்து முடிந்ததும் கடல் நீரோடு கரைந்து சங்கமித்தன.

அதன் பின்னர் அனைவருக்கும், இறுதியுத்தத்தில் எமது மக்களின் உயிர் ஆகாரமாகத் திகழ்ந்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

ஒருங்கிணைப்பு:
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
மற்றும் சௌத்தென்ட் மற்றும் எசெக்ஸ் பிராந்திய மக்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?