அதிகாலை நடந்த பயங்கரம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை
![அதிகாலை நடந்த பயங்கரம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை | 3 Family Members Murder For Money In Kurunegala அதிகாலை நடந்த பயங்கரம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை | 3 Family Members Murder For Money In Kurunegala](https://cdn.ibcstack.com/article/e1f4f1e8-2c5d-4e60-983e-5f1493cca49c/24-6649975454c0d.webp)
Sri Lanka PoliceKurunegalaSri Lanka Police InvestigationCrimeMurder
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக் கொடூர சம்பவம் குருணாகல் - மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலைகளை 42 வயதுடைய ஒருவரே செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.
இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்