முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 687 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு | Mullivaikkal Remembrance Gov Fail Fulfill Promises

Sri Lankan TamilsMullivaikal Remembrance DaySri Lankan Peoples
 8 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக பிரித்தானிய கலாச்சார, ஊடக மற்றும் விளையாட்டுத்துறை மாநில நிழல் செயலாளர் தங்கம் டெபோனையர் (Thangam Debbonaire) தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேலும் தாமதிக்காது முன்னெடுப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என டெபோனையர் கோரியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


மனித உரிமை மீறல்கள்

இறுதி போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்காண தமிழ் மக்கள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றனர். இறுதி கட்ட போரின் போது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டன.


போரில் நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் நினைவுகூருவதோடு இந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு

தமிழ் மக்களுடன் நிற்குமாறு நான் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோருகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கேற்ப போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.


இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் மதித்து அவர்களை பாதுகாக்குமாறு நான் இலங்கையிடம் கோருகின்றேன். சமாதானம், நல்லிணக்கம், மற்றும் நீண்ட கால அரசியல் தீர்வை நோக்கி பயணிக்குமாறும் இலங்கையிடம் கோருகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?