முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

F 690 நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!!

 

நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன்

நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன் | Popularity Of Ltte Leader Prabhakaran
Sri Lankan TamilsSri Lankan PeoplesSri Lanka GovernmentVelupillai Prabhakaran
 7 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் மூன்று தசாப்த கால உரிமைக் கோரிய யுத்தம், எந்தவொரு ஈவு, இரக்கமுமின்றி முடிவுறுத்தி வைக்கப்பட்டு 15 வருடங்கள்.

இந்த  15 வருடங்களும் யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூரவே அரசாங்கத்துடன் பெரும் போர் புரிந்திருக்கின்றது இந்த தமிழினம். 

இப்படி, ஆரம்ப காலத்தில் தமிழினத்தை கொஞ்சம் கொஞ்சமாக வதைக்க தொடங்கிய சிங்களத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்த்து நின்ற விடுதலைப் புலிகளின் தலைவரை புகழவோ, நினைந்துருகவோ விட்டுவிடுவார்களா என்ன இந்த சிங்கத்தின் மைந்தர்கள்.

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

ஆனாலும், காலம் மிக வலியது.  எப்போது ஒருவர் கூடாது, எமக்கு விரோதி என்று நினைத்து அவரை அழிக்க பல நாடுகளை ஒன்றுதிரட்டி சதி செய்தார்களோ அந்த தனி ஒரு நபரின் தேவை இன்று சிங்கள பெரும்பான்மை இனத்திலும் உணரப்படுகின்றது என்பது  நிதர்சனம்.

இனத்தின் காவலன்....!!

சமகால இளையோர் மத்தியில் ஆரம்பகால பெரும்பான்மை இன மனப்பாங்கு ஆங்காங்கே மறுதலிக்கப்பட்டு வருகின்றது என்பதை கண்கூடாக காண முடிகின்றது.  ஆனாலும், அடிப்படையை மாற்ற முடியாது என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருக்கின்றனர் என்பதும் வேதனைதான்.

அரசாங்கத்திற்கு  எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போதும், கடந்த காலங்களில்  நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போதும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகளின் தலைவரை நினைவுகூர்ந்ததும், அவரின் தேவையை தாங்கள் உணர்வதையும் வாய்விட்டு வெளிப்படுத்தியிருந்தனர். 

இந்தநிலையில், ஒரு  பெரும்பான்மை இன இளைஞன் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் எக்ஸ் தளத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில்,

“இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால்.

எனவே, நீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது” என குறிப்பிட்டுள்ளார். 

காலம் அனைத்தையும் மாற்றும் என்பதையும், ஒரு நாட்டின் குடிகளின்  நலனே தன்னுடைய நலன் என்றும் தன்னை அர்ப்பணித்த தலைவனின் புகழ் காலம் தாண்டியும் போற்றப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?