போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்
![போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் | Water Cannons Used On Protesters Colombo போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் | Water Cannons Used On Protesters Colombo](https://cdn.ibcstack.com/article/62bfc360-ace4-49ff-b146-f0461bffbc3e/24-6642126a9ac50.webp)
By Sulokshi 10 hours ago
இன்று (13) கொழும்பு பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், 08 வருடங்களாக நிலவி வரும் சம்பள வெட்டு, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துடன் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்