MullaitivuSri LankaSchool Incident
2 hours ago
Courtesy: Sutharsini
முல்லைத்தீவு (Mullaitivu) - உடையார்கட்டு பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (03.05.2024) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து சேதமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் எவையும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கவனயீனம்
புதுக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு செல்லும் நோக்கில் பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த பட்டா வாகானத்தின் மீது பின்னால் வந்த பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விபத்து நிகழ்ந்தமைக்கு பேருந்து சாரதியின் கவனயீனமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்