கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!
![கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்! | Businessman Abused Tamil Family Woman In Colombo கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்! | Businessman Abused Tamil Family Woman In Colombo](https://cdn.ibcstack.com/article/69c06ecf-105d-43de-81c0-2065e82e8cb2/24-663cec82c8a5a.webp)
![Shankar](https://cdn.ibcstack.com/user/avatar/ym.webp)
Shankar
கொழும்பில் தமது நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் முகாமையாளர் பதவிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்து, சமீபத்தில் இளம் தமிழ் குடும்ப பெண்ணை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் கோசல சேனாதீரவிடம் நேற்றையதினம் (08-05-2024) தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை அதிகாரிகளுக்கு வழங்குமாறு பல தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாடு செய்த இளம் பெண்ணை வட்ஸ்அப் வழியாக கோடீஸ்வர வர்த்தகர் அடையாளம் கண்டுள்ளார்.
சில உரையாடலுக்கு பின்னர், தனது நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் முகாமையளர் பதவி வழங்குவதாகவும், நேர்காணலுக்கு வருமாறும் அறிவித்ததன் அடிப்படையில், குறித்த பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
கணவனை கீழே தடுத்து வைத்து, பெண்ணை மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியள்ளனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்