சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு
![சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு | A Prisoners Body Hangs In The Cell சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு | A Prisoners Body Hangs In The Cell](https://cdn.ibcstack.com/article/afcc473c-d54d-4e96-8941-af474cf2d366/24-663418b3e9657.webp)
By Sumithiran
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பலேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பலேகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகையாவ பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி யுவனேஸ் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 54ஆவது பிரிவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்