வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம்
![வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife](https://cdn.ibcstack.com/article/4e4ebbbd-9733-4697-8947-f0b2a318df3a/24-6635e57587a9c.webp)
![Shankar](https://cdn.ibcstack.com/user/avatar/ym.webp)
Shankar
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் நஞ்சருந்திய நிலையில் நடுவீதியில் விழுந்து கிடந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
சில தினங்களுக்கு முன் நெடுங்கேணியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது சடலத்தை பார்த்த பின்னர் மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனே இவ்வாறு நஞ்சருந்தி நேற்றையதினம் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெடுங்கேணி - ஒதியமலை வீதியில் பெரியகுளம் வீதியில் நடுவீதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த 28 வயதான இளைஞன் எனவும், அவர் உயிரிழ்ந்த லேகநாதனின் ரைஸ் மில்லில் பணிபுரிந்து வந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது.
உயிரிழந்த இளைஞனுக்கும், மில் உரிமையாளரின் மனைவிக்கும் நெருக்கம் இருப்பதாக குறிப்பிட்டு, லோகநாதனின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு, தம்பதியினர் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தின் முன்னதாகவே, குடும்பத்துக்குள் சமரசம் ஏற்பட்டு, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும், ஓரிரு நாட்களின் முன்னர் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியமளவில் லோகநாதனின் சகோதரனின் மகனை தொலைபேசியில் அழைத்த பரமேஸ்மரி, கணவரை காணவில்லையென்றும், வீட்டில் சென்று பார்க்குமாறும் கேட்டுள்ளார்.
இருப்பினும், அவர் அதை மறுத்து, தான் வவுனியாவில் நிற்பதாகவும், பரமேஸ்வரியை சென்று பார்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பரமேஸ்வரி முச்சக்கர வண்டியில் கணவரின் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு கணவரின் சடலத்தை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மனைவி நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்றையதினம் குறித்த இளைஞனும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்