முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 611 உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பாரிய மாற்றம்?

 

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு | Swiss Plan Asylum Seeker Send To Africa
Asylum SeekerUnited KingdomSwitzerlandAfrica
 an hour ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சுவிட்சர்லாந்து (Switzerland) தற்பொழுது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில், எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகின்றது.

வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை

வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை

பிரித்தானியாவின் திட்டம்

இதற்கு முன்னர் பிரித்தானியா (United Kingdom) புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதன்போது, பிரித்தானியாவை சுவிட்சர்லாந்துப் பின்பற்றுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், சுவிட்சர்லாந்தின் திட்டம் பிரித்தானியாவின் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைகின்றது.


சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் ருவாண்டாவுக்கு அனுப்ப பிரித்தானியா விரும்புகின்றது.

அத்துடன் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதையும் வேறொரு நாட்டிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் திட்டம்

ஆனால், சுவிட்சர்லாந்து, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட எரித்ரிய நாட்டவர்களை மட்டுமே ருவாண்டாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதுடன் தானே புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கின்றது.

அதாவது, எரித்ரியா நாடு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தன் நாட்டவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு | Swiss Plan Asylum Seeker Send To Africa

இதன் காரணமாகவே, சுவிட்சர்லாந்தில் வாழும் 300 எரித்ரிய நாட்டவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகின்றது.

இந்த திட்டம் ஏற்கனவே சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் மேலவையில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?