முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டம் ஓய்ந்தது
காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தை விட்டு சென்றாலும் போராட்டம் ஓயாது என நடிகை திருமதி தமிதா அபேரத்ன காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம் | Galle Face Protest Protest An End
உடல் ரீதியாக போராட்ட களத்தை விட்டு வெளியேறினாலும் போராட்டம் ஓயவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடலில் ஒன்று திரளாத மக்கள்
அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம் | Galle Face Protest Protest An End
காலி முகத்திடலில் மக்கள் ஆரம்பித்த போராட்டமே இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் போராட்டகாரர்கள் தற்போது காவல்துறையினரால் தேடித் தேடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்