பெண் மருத்துவரின் பதற வைக்கும் செயல் - பறிபோயின அழகான இரண்டு உயிர்கள்
மகளை கொன்று தானும் உயிரை மாய்த்த மருத்துவர்
தனது 10 வயது மகளை கொன்ற பெண் மருத்துவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெங்களூரிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பெங்களூரில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா (39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் மருத்துவர்கள். இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
வீட்டுக்கு வந்த கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெண் மருத்துவரின் பதற வைக்கும் செயல் - பறிபோயின அழகான இரண்டு உயிர்கள் | Doctor Killed Her Daughter
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சைமா, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் சந்தேகம்
நாராயண், சைமா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து தனது மகளை கொன்று, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் சைமா சாவில் சில சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் நாராயணிடம் நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்