போதைக்கு அடிமையாகி மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம்
![போதைக்கு அடிமையாகி மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம் | Police Shot Husband Attack His Wife Drug Addicted போதைக்கு அடிமையாகி மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம் | Police Shot Husband Attack His Wife Drug Addicted](https://cdn.ibcstack.com/article/11db25bd-aa8b-4196-940d-3d94108733d2/24-6636549346a08.webp)
Sri Lanka PoliceWestern ProvinceGun Shooting
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
வாத்துவ, மொல்லிகொட பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (04-05-2024) பிற்பகல் வாத்துவ, மொல்லிகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்ட காயமடைந்த நபர், தனது மனைவியின் கழுத்தை கண்ணாடி பாட்டிலால் அறுத்து பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர், சந்தேக நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்